Thursday, July 16, 2026

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: சுமந்திரன் விரிவான வாதம் – விசாரணை செப்டம்பர் 7-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: சுமந்திரன் விரிவான வாதம் – விசாரணை செப்டம்பர் 7-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு..!


✍️ நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………..


✅👉 கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இந்த வழக்குடன் தொடர்புடைய மேலும் இரு மனுக்களும் அதே அமர்வில் நீதிமன்றத்தின் முன் எடுத்துக்கொள்ளப்பட்டன.


வழக்கு விசாரணையின் போது, தவராசா கலையரசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகி, கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக அம்சங்களை விளக்கி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விரிவான சட்ட வாதங்களை முன்வைத்தார்.


அதேவேளை, இடையீட்டு எதிர்மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. கலீல் ரஹ்மான் ஆகியோரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் அடங்கிய சட்டத்தரணிகள் குழு ஆஜரானர்.


மேலும், சமூக செயற்பாட்டாளர்களான முபாரிஸ் எம். ஹனீபா மற்றும் ஏ.எம்.நசீர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள தொடர்புடைய வழக்குகளும் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.


இடையீட்டு மனுதாரர்களின் சட்ட வாதங்களும், ஏனைய தொடர்புடைய வழக்குகளின் மேலதிக விசாரணைகளும் பின்னர் தொடரப்படவுள்ள நிலையில், வழக்கை 2026 செப்டம்பர் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அன்றைய தினம் இடையீட்டு மனுதாரர்கள் சார்பிலான சட்ட வாதங்களும், தொடர்புடைய வழக்குகளின் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: