Wednesday, March 25, 2026

ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகர் ரஹ்மத் மன்சூர் விடுக்கும் ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தி..!

Ad 728x90

 

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகர் ரஹ்மத் மன்சூர் விடுக்கும் ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தி..!

✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……..

✅👉 சிந்தனைக்கும் ஒற்றுமைக்கும் அழைக்கும்திருநாள் புனித ரமழான் மாதத்தின் ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்து, ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடும் இவ்வேளையில், மகிழ்ச்சியுடனும் அதேசமயம் சிந்தனையுடனும் நிறைந்த ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்நன்னாளை முன்னிட்டு, ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் தனது இதயம் கனிந்த ஈத் வாழ்த்துகளை மக்களிடம் தெரிவித்துக் கொள்கிறார்.

அவர் தனது செய்தியில்,
“இன்று புனிதமான ஈதுல் ஃபித்ர் தினமாக இருந்தாலும், தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல சவால்கள் நிறைந்த ஒரு சூழ்நிலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.

குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண யுத்த சூழ்நிலைகள் உலக முஸ்லிம் சமூகத்தின் மனங்களை வேதனைக்குள்ளாக்குகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,
“முஸ்லிம் உம்மத்தினரிடையே பிளவுகளையும் பிரிவினைகளையும் உருவாக்கும் சக்திகளிலிருந்து எம்மை அல்லாஹ் காக்க வேண்டும். எமது சகோதரத்துவத்தை வலுப்படுத்தி, ‘ஒற்றுமை’ எனும் உறுதியான கயிற்றைப் பற்றிப் பிடித்து, ஈமான் வழியில் ஒன்றிணைந்து நிற்கும் வலிமையை அல்லாஹ் எமக்கு அருள்வானாக” என மனமாரப் பிரார்த்தித்துள்ளார்.

அத்துடன்,
“உலகில் நிலவும் அநீதிகளும் அசாதாரண சூழ்நிலைகளும் நீங்கி, முஸ்லிம் நாடுகள் அமைதி, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தின் பாதையில் பயணிக்க அல்லாஹ்வின் அருள் கிடைக்க வேண்டும்” எனவும் அவர் துஆ செய்துள்ளார்.

இலங்கை குறித்து குறிப்பிடுகையில்,
“நாம் வாழும் இந்நாட்டில் நிலவும் சவால்களைத் தாண்டி, அனைத்து இன மக்களும் நல்லிணக்கம், சக வாழ்வு, சமத்துவம் மற்றும் நிலையான சமாதானம் ஆகிய உயரிய பண்புகளுடன் ‘ஒரே நாடு – ஒரே தேசம்’ என்ற மனப்பாங்கில் ஒன்றிணைந்து வாழ அல்லாஹ்வின் அருள் பொலிவதாக” என அவர் வேண்டிக் கொண்டுள்ளார்.

இறுதியாக,
“இந்த புனிதமான ஈதுல் ஃபித்ர் தினம் எம் அனைவரின் வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் அல்லாஹ்வின் அருள் பொலிவை நிரப்பட்டும்” என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆமீன் .

🌎 www.mihrajnews.com



✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி 

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: