Saturday, February 14, 2026

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஐம்பெரும் விழா..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஐம்பெரும் விழா..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தை கல்முனை வலயக்கல்வி அலுவலகம் உத்தியோகபூர்வமாக கையளித்த நினைவுக்கல் திரை நீக்கம், PSDG நிதியில் செய்யப்பட்ட அபிவிருத்தி கையளிப்பு, புதிய சிற்றுண்டி சாலை திறப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் விடுகை, கடந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றி சாதித்த மாணவர்களை கௌரவிக்கும் விழா, நினைவுமலர் வெளியீடு மற்றும் சிறப்புக் கௌரவிப்பு போன்ற ஐம்பெரும் விழா இன்று (06) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் குடும்ப சகிதம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
நிகழ்வின் பிரதான அம்சமாக, க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கல்விப் பயணம், சாதனைகள் மற்றும் நினைவுகளைச் சுமந்த நினைவுமலர் வெளியிடப்பட்டது. அத்துடன், பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களும், எதிர்கால கல்வி மற்றும் வாழ்க்கைப் பாதைக்கான ஊக்குவிப்பு உரைகளும் வழங்கப்பட்டன.
அத்துடன் கல்முனை கல்வி வலய மேம்பாட்டிலும், பாடசாலை மேம்பாட்டிலும் அக்கறை செலுத்தி கல்விப்பணியாற்றிய கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களுக்கு பாடசாலை சமூகத்தினாலும், இஸ்லாமாபாத் மக்களாலும் அமோக பாராட்டும் கௌராவிப்பும் இதன்போது நடைபெற்றது.
மேலும், பிராந்திய ஊடகபணியில் நீண்ட காலமாக சேவையாற்றி வருவதுடன் பாடசாலை மேம்பாட்டில் அக்கறை செலுத்தி வரும் அண்மையில் உபாலி விஜேவர்தன சிறப்பு தேசிய விருதை வென்ற அல்- மீஸான் பௌண்டஷன் தவிஷாளர், ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமருக்கு கல்வி சமூகம் இதன்போது பாராட்டி கௌரவித்தது.
மேலும், கல்வி, ஒழுக்கம் மற்றும் பாடசாலைச் சேவைகளில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு, மாணவர்களின் மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் ஒரு முக்கியமான தருணமாக அமைந்ததாக கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குவதற்கும் இவ்வகையான நிகழ்வுகள் பெரும் ஊக்கமாக அமையும் என நிகழ்வில் உரையாற்றியவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் இந்நிகழ்வில் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவி திருமதி ஆரிக்கா காரியப்பர், அட்டாளைச்சேனை தேசிய கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் ஏ. சித்தி ரிஹானா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், வர்த்தகர் எம்.எச்.எம். முபாரிக் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
மேலும் பாடசாலை பிரதி அதிபர், பிரிவு தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், இஸ்லாமாபாத் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், இஸ்லாமாபாத் ஜனாசா நலன்புரி அமைப்பின் நிர்வாகிகள், யங் மௌன்ட் விளையாட்டு கழக நிர்வாகிகள், கல்வி ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் பெருமளவில் கலந்து கொண்டனர் .
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்







SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: