𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 

………
இந்நிகழ்வு, இலங்கை நாட்டிற்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அதிமெதகு பாஹிமுல் அஸீஸ் அவர்களின் அனுசரணையுடன், ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாகவும் ஒழுங்குமுறையுடனும் இடம்பெற்றது.
பொருளாதார சவால்களை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு ரமழான் மாதத்தை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் வரவேற்க உதவும் நோக்கில் இவ்வுலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. “பகிர்வதே பரிசுத்தம்” என்ற மனிதநேயக் கொள்கையை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு பொதிகளை பயனாளிகளிடம் கையளித்தார்.
தனது உரையில், ரமழான் மாதம் ஆன்மீக சுத்திகரிப்பு, சமூக ஒற்றுமை மற்றும் மனிதநேயச் சேவையின் மாதமாகும் எனக் குறிப்பிட்ட அவர், தேவையுள்ளோருக்கு உதவுவது ஒவ்வொருவரின் கடமையென வலியுறுத்தினார்.
மேலும் இந்நிகழ்வில் உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பயனாளிகள் மற்றும் பவுண்டேசன் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சமூக அக்கறையுடன் தொடர்ச்சியாக நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் ரஹ்மத் பவுண்டேசன், இந்நிகழ்வின் மூலம் மீண்டும் ஒருமுறை தனது மனிதநேய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. ரமழானை வரவேற்கும் இந்த நற்கருணைச் செயல், பல குடும்பங்களின் இதயங்களில் நம்பிக்கையின் ஒளிக்கதிராக மிளிர்கிறது.


















0 comments: