Friday, July 11, 2025

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் 'சுத்தமான இலங்கை' வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் 'சுத்தமான இலங்கை' வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 'சுத்தமான இலங்கை' (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து அரச பாடசாலைகளிலும் இச்செயற்திட்டம் இன்று (ஜூலை 09, 2025) சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம். ஐ. சம்சுதீன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையை தூய்மையான மற்றும் ஆரோக்கியமான நாடாக மாற்றும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய வேலைத்திட்டம், பாடசாலை மாணவர்களிடையே தூய்மை மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாடசாலை சூழலை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதன் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், பாடசாலை வளாகத்தை சுத்தப்படுத்துதல், கழிவு முகாமைத்துவம், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், மற்றும் மாணவர்களிடையே பொறுப்புணர்வையும் ஒழுக்க விழுமியங்களையும் வளர்ப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
இந்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் நூருல் ஹுதா உமர் உட்பட பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவினர், பாடசாலை பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும், பாடசாலை சமூகத்தினரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து பங்கேற்று, பாடசாலையின் தூய்மையை உறுதிப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்தனர்.
'சுத்தமான இலங்கை' வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதன் மூலம், எதிர்கால சந்ததியினர் தூய்மை மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை ஒரு வாழ்க்கை முறையாக கடைப்பிடிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: