Friday, July 11, 2025

அல்- மீஸான் ஒருங்கிணைப்பில் 400க்கு மேல் மாணவர்கள் கலந்து கொண்ட தரம் ஐந்து இலவச கருத்தரங்கு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 அல்- மீஸான் ஒருங்கிணைப்பில் 400க்கு மேல் மாணவர்கள் கலந்து கொண்ட தரம் ஐந்து இலவச கருத்தரங்கு..!
✍️ மாளிகைக்காடு செய்தியாளர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஒருங்கிணைப்பில் ஜூனியர் தமிழனின் “கற்றலுக்கு கரம் கொடுப்போம்” திட்டத்தின் கீழ் கல்முனை கல்வி வலய 28 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தரம் ஐந்து மாணவர்கள் கலந்து கொண்ட புலமைப்பரிசில் இலவச கருத்தரங்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் நூருல் ஹுதா உமரின் நெறிப்படுத்தலில் சனிக்கிழமை நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட தரம் ஐந்தில் கல்வி கற்கும் 410 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த முழுநாள் கருத்தரங்கை கல்முனை கல்வி வலய நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் பிரதம அதிதியாக வும், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ் கௌரவ அதிதியாகவும், ஜூனியர் தமிழன் பத்திரிகை ஆசிரியர் வருணி ஐசக், சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ. சம்சுதீன் ஆகியோர் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டு தொடக்கி வைத்தனர்.
தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ பாடசாலைகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த புலமைப்பரிசில் இலவச கருத்தரங்கின் வளவாளராக பது/ பசறை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் எம். சங்கரேஸ்வரன் கலந்து கொண்டதுடன் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் பொருளாளர் எல்.எம். நிப்ராஸ் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், இளைஞர் பிரிவினர், தமிழன் ஆசிரிய பீடத்தினர், பிரதேச பாடசாலை ஆசிரியைகள் என பலரும் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான காலை உணவின் அனுசரணையை ரிஸ்லி முஸ்தபா கல்வி மையம் சமுக சேவை அமைப்பு மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் ஆகியோர் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: