𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


(05) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் தலைமையால் அக்கரைப்பற்று பிரதேச சபை பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அதிலும் குறிப்பாக இசங்கணிச்சீமை வட்டார மக்களை முழுமையாக ஏமாற்றினார். இசங்கணிச்சீமை மாணவர்களின் கல்வி மேம்பாட்டு விடயங்களிலும், பள்ளிவாசல் காணி விடயங்களிலும் போலியான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றினார். அதுபோன்றே மக்களுக்கு போலியான விளம்பரங்களை செய்தார்களே தவிர உருப்படியாக எதுவும் செய்தபாடில்லை. கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச சபையில் நடைபெற்ற சில்லறை விளையாட்டுக்களை மக்கள் இனியும் அனுமதிக்க மாட்டார்கள். மக்கள் இவர்களின் போலி முகங்கள் பற்றி தெளிவாக இருக்கிறார்கள்.
இம்முறை முஸ்லிங்களின் ஏகோபித்த தலைமையாக உருவெடுத்துள்ள முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் எம்.பி அவர்களின் கரங்களை பலப்படுத்தி எங்களின் வேட்பாளர்கள் மீது மக்களுக்கு இருக்கும் அதீத நம்பிக்கையின் காரணமாக அக்கரைப்பற்று பிரதேச சபையை மயில் அணியிடம் வழங்க மக்கள் முடிவெடுத்துள்ளார். இம்முறை மாற்றத்தை மக்கள் விரும்புவதால் அக்கரைப்பற்று பிரதேச சபை எங்கள் வசமாகும். நாங்கள் மக்கள் விரும்பும் ஆட்சியை முன்னெடுப்போம் என்றார்.


0 comments: